மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில், பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு மே 10ஆம் தேதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த விடுதிகளில் சேர விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2019-2020ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்திடவும், விளையாட்டு விடுதி தொடர்பான விவரங்களை பெறவும் இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரியில் மே 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.