துறையூர் அருகே வெளிமாநிலத்தைச் சேர் ந்த ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனக் கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
ஆத்தூர் அருகே கீரிப்பட்டியைச் சேர்ந்த ஜெயவல் என்பவருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனத்தில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த லக்கார்டி என்பவரின் மகன் அனில்(39) கூலி வேலை செய்தார். இந்நிலையில், திங்கள்கிழமை உப்பிலியபுரம் அருகேயுள்ள வலையப்பட்டியில் ஆழ்துளை கிணறு தோண்டி விட்டு உப்பிலியபுரம் பெட்ரோல் பங்கில் உறங்கினர். அப்போது அனிலுக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமானார்.
இதனையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினார். இதனையடுத்து தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.