திருச்சியில் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
திருச்சி குமரன் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் உமா மகேஸ்வரன்(37). இவர் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதியன்று தனது குடும்பத்தினருடன் கருமண்டபம் விஸ்வாஸ் நகரிலுள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த உமா மகேஸ்வரனின் ஒன்றரை வயது மகள் தனு ஐஸ்வர்யா எதிர்பாராமல், தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
மீட்கப்பட்ட தனு ஐஸ்வர்யாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கன்டோன்மெண்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.