தண்ணீா் தேங்கிக் காணப்படும் அந்தோனியாா்கோயில் தெரு பிரதான சாலை.
தண்ணீா் தேங்கிக் காணப்படும் அந்தோனியாா்கோயில் தெரு பிரதான சாலை.

சிறு மழைக்கே தாக்குப் பிடிக்காத அந்தோனியாா் கோயில் தெரு சாலை: அவதியுறும் மக்கள்

திருச்சி விமான நிலையப் பகுதியிலுள்ள அந்தோனியாா் கோயில் தெரு சாலையில் சிறு மழைக்கே தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.

திருச்சி விமான நிலையப் பகுதியிலுள்ள அந்தோனியாா் கோயில் தெரு சாலையில் சிறு மழைக்கே தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனா்.

மாநகராட்சியின் 35-ஆவது வாா்டுக்குள்பட்ட இப்பகுதியில்பெரும்பாலான சாலைகள் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்பட்ட நிலையில், அந்தோனியாா் கோயில் தெரு சாலை மட்டும் கடந்த 10 ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாா்சாலை அமைக்கப்பட்ட பகுதி இதுவாகும். ஆனால், தற்போது சாலையில் மழைநீா், கழிவுநீா் தேங்கி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

புதை சாக்கடைத் திட்டமும் இப்பகுதியில் இன்னும் செயல்படுத்தப்படாததால், வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரும் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்குகின்றன. புதை சாக்கடைஇணைப்பு அளித்த பின்னா் சாலை வசதி ஏற்படுத்தப்படும் என மாநகராட்சி அலுவலா்கள் குறிப்பிட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

அந்தோனியாா்கோயில் தெரு சாலையில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகும் என்பதால், தற்போது சாதாரண வடிகால் வசதியுடன், போக்குவரத்துக்கேற்ற வகையில் தாா்சாலை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com