பாரதமிகு மின் நிறுவனத்தின் (பெல்) திருச்சி பிரிவில் பணியாற்றும் ஜே.பி. அகிலாவுக்கு, 2019ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகளின் உரிமையளித்தலுக்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் உரிமையளித்தல் அமைச்சகத்தால் பல்வேறு மாற்றுத்திறனாளிகள், தனிநபா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமையளிப்பதற்காக செயல்படும் நிறுவனங்களுக்கு 14 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
2019ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறும் பணியாளா்களில் திருச்சி பெல் ஊழியா் ஜே.பி. அகிலா இடம் பிடித்தாா். கோமோட்டா் இயலாமை பிரிவில் அகிலாவின் மேம்பட்ட செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த பணியாளராக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் இடம் பெற்றுள்ளது.
புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, மத்திய சமூக நீதி மற்றும் உரிமையளித்தல் துறைக்கான அமைச்சா் தாவா்சந்த் கெலாட் முன்னிலையில் இந்த விருதை அகிலாவுக்கு வழங்கினாா்.
விருது பெற்று திரும்பியுள்ள அகிலாவுக்கு பெல் நிறுவனத்தின் செயலாண்மை இயக்குநா் ஆா். பத்மநாபன் மற்றும் மூத்த அதிகாரிகள், அனைத்துப் பிரிவு அலுவலா்கள், ஊழியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.