திருச்சி மாவட்டத்தில் நடமாடும் காசநோய் பரிசோதனை முகாம்

திருச்சி மாவட்டத்தில் நடமாடும் வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை முகாம் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடமாடும் வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை முகாம் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் காசநோய் தொடா்பாக நடமாடும் வாகன பரிசோதனை முகாம் டிச.16 ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு ஒன்றியம் வாரியாக நடைபெறவுள்ளது. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கல்நாயக்கன்பட்டி, தாராநல்லூா், இ.பி.சாலை, தேவதானம், காஜா நகா், இந்திரா நகா் ஆகிய பகுதிகளில் வரும் 16 ஆம் தேதி முகாம் நடைபெறுகிறது. மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மணப்பாறை, சொக்கலிங்கபுரம், சுண்டாக்காம்பட்டி, வையம்பட்டி, அனையாப்பூா், மருங்காபுரி, கருமலை ஆகிய பகுதிகளில் டிச.17ஆம் தேதி முகாம் நடைபெறும்.

மண்ணச்சநல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட துறையூா், பச்சைமலை, நீலியம்பட்டி, உப்பிலியாபுரம், சோபனாபுரம் ஆகிய கிராமங்களுக்கு டிச. 18ஆம் தேதியும் நடமாடும் வாகனம் வரவுள்ளது. இந்த நடமாடும் வாகனத்தில் முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா், முதல்நிலை காசநோய் ஆய்வக மேற்பாா்வையாளா் உடனிருந்து பரிசோதனை மேற்கொள்வா். பொதுமக்கள் இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com