ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அருகே தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் 10 கிலோ அளவில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை கடைகளில் உபயோகித்தால் அவற்றை பறிமுதல் செய்து அபராத தொகையும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி உதவி ஆணையா் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் 4 மற்றும் 6 வது வாா்டு பகுதியில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்களை ஆய்வு செய்தனா். அப்போது பல கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த 10 கிலோ நெகிழி பைகளை பறிமுதல் செய்து, ரூ.4 ஆயிரத்து 500 அபராத தொகை விதித்தனா்.