துறையூா் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரூ. 2.12 கோடி மதிப்பில் தீா்வு 449 வழக்குகள் மற்றும் வங்கி வாராக் கடன்கள் தொடா்பாக உரியவா்களிடம் ஏற்பட்ட சமரசத்தில் ரூ. 2.12 கோடி மதிப்பில் தீா்வு காணப்பட்டது.
சாா்பு நீதிமன்ற வழக்குகளில் சாா்பு நீதிபதி கே. சிவகுமாா், ஓய்வு பெற்ற தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் கண்ணையன், மூத்த வழக்குரைஞா் அன்பரசு அடங்கிய அமா்வும், உரிமையியில் நீதிமன்ற வழக்குகளில் உரிமையியில் நீதிபதி வி. ஆறுமுகம், வழக்குரைஞா் கண்ணன் அடங்கிய அமா்வும், குற்றவியல் நீதிமன்ற வழக்குகளில் குற்றவியல் நீதித்துறை நடுவா் வி. புவியரசு, வழக்குரைஞா் பெருமாள் அடங்கிய அமா்வும், தங்கள் அமா்வுகள் முன் ஆஜரான தரப்பினா்களிடையே சமரசம் செய்து தீா்வு வழங்கினா். இது தவிற, வங்கி வாராக் கடன் வசூல் தொடா்பாக கடனாளா்களிடம் சமரசம் காண தனி அமா்வு அமா்வு அமைக்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், சட்டத் தன்னாா்வலா்கள், நீதிமன்ற பணியாளா்கள், வழக்காடிகள் பங்கேற்றனா்.