திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் மகன் சிவக்குமார் (22). இவர், திருச்சி மிளகுபாறையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, தனியார் மருத்துவமனையில் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர், அதே மருத்துவமனையில் பணிபுரியும், உறையூரைச் சேர்ந்த செல்வம் மகன் துரைராஜ் (22) என்பவருடன், இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை அரியலூர் சென்றார்.
சென்னை புறவழிச்சாலை காவிரிப் பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற ஒரு காரை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது, நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவக்குமார் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார். துரைராஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருச்சி மாநகர போக்குவரத்து (வடக்கு) புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.