திருச்சி மத்திய சிறை தோட்டத்தில் கரும்பு பயிரிடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இப்பணியை திருச்சி சரக சிறைத்துறை துணை தலைவர் ஜி.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கரும்பு விதை நடும் பணியை சிறைவாசிகள் மேற்கொண்டனர். நிகழ்வில் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் முருகேசன் , சிறை அங்காடி கண்காணிப்பாளர் அ.திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.