மத்திய அரசை கண்டித்து திருச்சி ஹெச்ஏபிபி தொழிலாளர்கள் கறுப்புப் பட்டை அணிந்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரபிரதேச மாநிலம் போர்வால் பகுதியில் உள்ள படைகலன் தொழிற்சாலையை பாதுகாப்புத் துறையில் இருந்து பொதுத்துறை நிறுவனமாக மாற்றிய மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரபாகரன் தலைமை வகித்தார். தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரணியன், தேசிய தொழிலாளர் தொழிற்சங்கத்தின் இணை செயலாளர் செந்தில்குமார், பாரதிய மஸ்தூர் சங்கம் பொதுச் செயலாளர் ஆர்.ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
கலந்து கொண்டனர்.