திருச்சி கோளரங்கத்தில் பள்ளி மாணவர், பொதுமக்களுக்கான வான் நோக்குதல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெறுகிறது.
திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் சனிக்கிழமை (ஜன.12) இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை தொலை நோக்கி மூலம் வான்பொருள்களை பொதுமக்கள் காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வானம் தெளிவாக இருக்கும் நிலையில் இந்நிகழ்ச்சி நடைபெறும் என அண்ணா அறிவியல் மைய கோளரங்க திட்ட இயக்குநர் ரா. அகிலன் தெரிவித்துள்ளார்.