தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் ஜன.19 ஆம் தேதி நடைபெறுகிறது.
தொட்டியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகிக்கிறார். இதில், தொட்டியம் வட்டத்தில் உள்ள அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், எரிவாயு விநியோக ஒருங்கிணைப்பாளர் பங்கேற்கின்றனர். எனவே, தொட்டியம் வட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களும் தவறாமல் கலந்து கொண்டு குறைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.