மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.10.25 லட்சம் நிதியுதவி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 205 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு  ரூ.10.25 லட்சம் நிதியுதவி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 205 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு  ரூ.10.25 லட்சம் நிதியுதவி வழங்கியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மழைக்காலங்களில் அவர்கள் தொழில் செய்ய இயலாத நிலையை கண்டறிந்து அரசின் சார்பில் பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 2018-2019 வரையிலான ஆண்டில்  205 பேருக்கு அவரவர் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10.25 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com