திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான கே.எம். கலையரசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதித்துறை நடுவர் எம். தர்மபிரபு மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்குரைஞர்கள் செல்வராஜ், துரை.அழகிரி உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிகள் குழு இளநிலை உதவியாளர் எச். புனிதா செய்தார்.