திருச்சி சோமரசம்பேட்டை மேலசவேரியார்புரம் புனித வனத்து அந்தோணியார் ஆலய தேர்பவனி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்த ஆலயத் திருவிழா ஜனவரி 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி வரை தினமும், திருப்பலி சிறப்பு மறையுடன் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திருப்பலியும், இரவு 7 மணிக்கு தேர்பவனி நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை (18ஆம் தேதி) இரவு 7 மணிக்கு திருப்பலியுடன் கொடியிறக்கம் நடக்கிறது. நிகழ்வுகளில் சோமரசம்பேட்டை பங்கின் இறைமக்கள், புனித ஜெபமாலை அன்னை இல்லம், திருச்சிலுவை இல்ல அருட் தந்தையர்கள் மற்றும் புனித அன்னாள் சபை அருள் சகோதரிகள் கலந்து கொள்கின்றனர்.