திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
தொட்டியம் அருகிலுள்ள திருஈங்கோய்மலை சாலியர் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி சாந்தினி (37). இவர்கடந்த ஜன 10 ம் தேதி இரவு வீட்டில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தொட்டியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.