ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்த இளைஞர் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை  கைப்பற்றினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்த இளைஞர் சடலத்தை ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை  கைப்பற்றினர்.
மணப்பாறையை அடுத்த செட்டியப்பட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர்  காயங்களுடன்  இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில்,   ரயில்வே போலீஸார் அங்கு சென்று, சடலத்தை மீட்டனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி  மாவட்டம், மேலகூத்துடன்காடு பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்பது தெரிய வந்தது. தந்தையை இழந்த இவர் சென்னையில் மருந்தகத்தில் பணியாற்றி வந்ததும், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலில் புறப்பட்டுச் சென்ற போது தவறி விழுந்து இறந்ததும் தெரிய வந்தது.  இதுகுறித்து ரயில்வே  திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com