தமிழகத்தில் நல்ல மழை வேண்டியும், காவிரி பெருக்கெடுத்து ஓடவும், நாட்டில் வறட்சி நீங்கவும் சென்னை அம்பத்தூர் புவனேஸ்வரி பீடத்தின் பரமஹம்சர் பரத்வாஜ் சுவாமிகள் தனது சீடர்களுடன் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
பல ஆண்டுகளாக மழை வேண்டி பல்வேறு யாக பூஜைகளைச் செய்து வரும் இவர் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்று நடுமணலில் புதன்கிழமை காலை மழை வேண்டி சுமார் 3 மணி நேரம் சிறப்பு பூஜை செய்தார். அப்போது வராகி அம்மன் மற்றும் காவிரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.