திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.10.24 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் இருந்து சனிக்கிழமை சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடமைகளை சுங்கத் துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரைக்காலைச் சேர்ந்த மணிவண்ணன் (37) என்பவர் ரூ. 10.24 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ, ஸ்டெர்லிங், கத்தார் ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.