திருச்சி நீதிமன்றங்களில் காவலர்கள், பெருக்குபவர்கள், தோட்டக்காரர்கள், மசால்ஜி மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு உரிய தகுதி உடையோர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து முதன்மை மாவட்ட நீதிபதி கே. முரளிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி நீதிமன்றங்களில் 6 காவலர்கள், 7 பெருக்குபவர்கள், 2 தோட்டக்காரர்கள், 13 மசால்ஜி, 1 துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கான விரிவான அறிக்கை நீதிமன்றத்தின் http://districts.ecourts.gov.in/tiruchirappalli என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.