ஆண்டுதோறும் ரூ.6,000 பெற விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெற   விவசாயிகளுக்கு ஆட்சியர் சு.சிவராசு  அழைப்பு


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெற   விவசாயிகளுக்கு ஆட்சியர் சு.சிவராசு  அழைப்பு விடுத்துள்ளார். 
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு": 
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த பிப். 2 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  முதற்கட்டமாக 2 ஹெக்டேர் வரை நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.  
இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும், அதாவது, சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.  எனவே உயர் வருவாய்ப் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர உரிய விண்ணப்பத்துடன், ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், பட்டா நகல், குடும்ப அட்டை நகல்களை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அந்தந்த வட்டாட்சியர் ஆகியோரிடம் அளித்து பயன்பெறலாம்.
மேலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிதாரர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.  இதுவரை நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர் சம்மந்தப்பட்ட வட்டாட்சியரை அணுகி,  ஜூன் 30 ஆம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து அதன் அடிப்படையில் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com