சாலை விபத்தில் தொழிலாளி பலி

துவரங்குறிச்சி அருகே பனைமரத்தில் மோட்டார் சைக்கிள்மோதியதில்,  தேங்காய் உறிக்கும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை


மணப்பாறை: துவரங்குறிச்சி அருகே பனைமரத்தில் மோட்டார் சைக்கிள்மோதியதில்,  தேங்காய் உறிக்கும் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மருங்காபுரி ஒன்றியம், கள்ளக்காம்பட்டியைச் சேர்ந்தவர் க.பெருமாள் (26). தேங்காய் உறிக்கும் தொழிலாளியான இவர், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கொண்டையம்பட்டி நீர்தேக்கத் தொட்டி அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பனைமரத்தில் மோதியது.
இதில் நிகழ்விடத்திலேயே பெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com