குடிநீர் கோரி துறையூர் பொதுமக்கள் மனு

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குள்பட்ட முத்தமிழ் நகரில் கடந்த 2

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சிங்களாந்தபுரம் ஊராட்சிக்குள்பட்ட முத்தமிழ் நகரில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் பிரச்னை உள்ளது. இவர்கள் கடந்த 5 மாதமாக அரை கி.மீ. தொலைவில் உள்ள துறையூர் திருச்சி சாலையில் காளிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து நீர் எடுத்துச் வருகின்றனர். 
இந்நிலையில் முத்தமிழ் நகரில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் துறையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெரியசாமியிடம் நேரில் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com