குற்றச் சம்பவம்: 24 பேர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரப்பூர் பொன்னர் - சங்கர் மாசிப்பெருந்திவிழாவில் திருட்டு மற்றும் குற்ற

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வீரப்பூர் பொன்னர் - சங்கர் மாசிப்பெருந்திவிழாவில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேரை வியாழக்கிழமை போலீஸார் கூண்டோடு கைது செய்தனர்.
திருவிழாவில் குற்றங்களைத் தடுக்கும் விதமாக காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளர் ஷர்மு தலைமையில் சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.
புதன்கிழமை வேடபரி நிகழ்ச்சியைத்  தொடர்ந்து இரவில் கண்காணிப்பில் இருந்த சிறப்பு படையினர், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பக்தர்களிடம் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 24 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து நள்ளிரவில் கைது செய்தனர். அனைவரும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com