திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி 5 ஆம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
இக் கோயில் பங்குனித் திருவிழாவின் 9 ஆம் நாள் நடக்கும் தேரோட்டத்துக்கான தேர்க்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினசரி காலை பல்லக்கு புறப்பாடும், தினசரி இரவு திருவீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவின் 5 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை அருள்மிகு சந்திரசேகரர், அம்மனின் பல்லக்கு புறப்பாடும், இரவு பூச மண்டபத்தில் அபிஷேக ஆராதனையும் நடைபெற்று, சுவாமிகள் தேரோடும் வீதி, உள்வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.