திருச்சி விமானநிலையத்தில் ரூ.9.62 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
இலங்கைத் தலைநகர் கொழும்புவிலிருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கன் விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த முகம்மது ஜவாஹீர், ரூ.9 . 62 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்க நகைகளை தனது உடைமையில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து தங்கநகைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.