வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்துநிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திருச்சி மாவட்ட நிர்வாகம், எம்ஏஎம் கல்லூரி மாணவர்கள் மற்றும் திருச்சி எக்ஸ்னோரா இளையோர், மாணவர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து இந்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நடத்தின. திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சு. சிவராசு, விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டும், கைரேகையை பதிவு செய்தும் இயக்கத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, கல்லூரி மாணவர், மாணவிகள், பொதுமக்கள், பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள் பலரும் கையெழுத்திட்டனர். 100 சவீத வாக்களிக்க உறுதிமொழியேற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாகத்தினர், எக்ஸ்னோரா அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com