வாத்தலை அருகே விபத்தில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பல்லபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசி (70). இவர், தனது மகன் மாரிமுத்து (44)வுடன் இருசக்கர வாகனத்தில் ஏப். 30ஆம் தேதி வெளியே சென்றார்.
ஜீயபுரம் - குருவம்பட்டி சாலையில் வாத்தலை அருகே சென்றபோது, தமிழரசி கீழே தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார்.
அருகில், இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வாத்தலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.