மணப்பாறை அருகே கால்நடைகளின் தாக்கம் தீர்க்க, தண்ணீர்த் தொட்டி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த முத்தபுடையான்பட்டியில் கண்ணுடையான்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கு பால் கறவைக்காக வரும் கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மாவட்ட பால்வளத் துணைப்பதிவாளர் ம.ஸ்ரீகலா செவ்வாய்க்கிழமை இப்பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சங்கத் தலைவர் கா.ஜெயசீலன், செயலர் பி.பாலமுத்து உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.