பராமரிப்பு பணி: கரூர் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்

சேலம் கோட்டத்திற்குட்ட  ஈரோடு-கரூர்-திருச்சி இடையே பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமையும்

சேலம் கோட்டத்திற்குட்ட  ஈரோடு-கரூர்-திருச்சி இடையே பராமரிப்புப் பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமையும், (மே17) மே 21 ஆம் தேதியும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
மே 17 ஆம் தேதி:   கோவை- நாகர்கோவில் விரைவு பயணிகள் ரயில் (வண்டி எண். 56320) ஈரோடு-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-கோவை விரைவு பயணிகள் ரயில் (56319) திண்டுக்கல்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு-திருச்சி விரைவு பயணிகள் ரயில் (வண்டி எண். 56712) ஈரோடு-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.  
ஈரோடு- திருநெல்வேலி பயணிகள் ரயில் (வண்டி எண். 56825) ஈரோடு-கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண். 56841) கரூர் - ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண். 56826) கரூர்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - ஜேலார்பேட்டை பயணிகள் ரயில் ( வண்டிஎண்.56846) ஈரோடு-சேலம் இடையே ரத்து செய்யப்படுகிறது. 
கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும் ரயில்கள்:  நாகர்கோவில்-மும்பை சென்ட்ரல் ரயில் (வண்டி எண். 16340) ஈரோடு-கரூர் இடையே 80 நிமிடமும்,  திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் (56713) திருச்சி கோட்டை-கரூர் இடையே 45 நிமிடமும் கட்டுப்படுத்தப்பட்டு மெதுவாக இயக்கப்படும். 
மே 21ஆம் தேதி:  கரூர் - திருச்சி டெமு ரயில் (வண்டி எண். 76836) மற்றும் திருச்சி-கரூர் டெமு ரயில் (வண்டி எண். 76833) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கோவை - நாகர்கோவில் விரைவு பயணிகள் ரயில் (வண்டி எண். 56320) ஈரோடு - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது.  நாகர்கோவில்-கோவை விரைவு பயணிகள் ரயில் (56319) திண்டுக்கல்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு-திருச்சி விரைவு பயணிகள் ரயில் (வண்டி எண். 56712) ஈரோடு - திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. 
ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரயில் (வண்டி எண். 56825) ஈரோடு-கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண். 56841) கரூர்-ஈரோடு இடையே ரத்து செய்யப்படுகிறது.  ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் (வண்டிஎண்.56110) கரூர்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. 
கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும் ரயில்கள்: திருநெல்வேலி-ஈரோடு பயணிகள் ரயில் ( வண்டி எண். 56826) கரூர்-கொடுமுடி இடையே 50 நிமிடம் கட்டுப்படுத்தப்பட்டு மெதுவாக இயக்கப்படும். ஈரோடு-ஜேலார்பேட்டை பயணிகள் ரயில் (வண்டிஎண். 56846) ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து 30 நிமிடம் தாமதமாக புறப்படும்.  திருச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் (56713) இந்த வழித்தடத்தில் 30 நிமிடம் கட்டுப்படுத்தப்பட்டு மெதுவாக இயக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com