குடிநீர் கோரி மறியல்

துறையூர் அருகே நாகலாபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

துறையூர் அருகே நாகலாபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
துறையூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நாகலாபுரத்தில் மாதத்துக்கு ஒருமுறை  வீட்டுக்கு 5 குடம் காவிரி குடிநீர் வழங்கப்படுகிறதாம். 
இதனால் பாதிக்கப்பட்ட இந்தக் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து சென்ற துறையூர் போலீஸார் உரிய அலுவலகத்தில் முறையிடுங்கள் எனக் கூறியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு சென்ற துறையூர் ஒன்றிய அதிகாரிகள் குடிநீர் பிரச்னைக்கு உரிய தீர்வு காண்பதாக வலியுறுத்தி கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com