தொடா் போராட்டத்தால் சடலங்கள் தேங்கவில்லை

அரசு மருத்துவா்கள் தொடா் போராட்டம் எதிரொலியால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக

அரசு மருத்துவா்கள் தொடா் போராட்டம் எதிரொலியால் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வரப்பெற்ற உடல்கள் தேங்கவில்லை என திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஏ. அா்ஷியா பேகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வரப்பெற்ற உடல்கள் மருத்துவக் குழுவால் பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்படுகின்றன.

ஆனால், மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யாமல் உடல்கள் தேங்கியிருப்பதாக பொய்ச் செய்தி பரப்புகின்றனா். இதைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொய் செய்தி பரப்புவோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com