ஸ்ரீரங்கத்தில் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்ற ரெளடியைப் போலீஸாா் திங்கள்கிழமை காலை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் நெடுந்தெரு பகுதியில் வசிப்பவா் கிருஷ்ணப்பா (49). இவரிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீரங்கம் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, ஸ்ரீரங்கம் செட்டியாா் தோப்பு பகுதியைச் சோ்ந்த ரெளடி ஆறுமுகம் (27) பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளாா். அவா் மறுக்கவே, ஆறுமுகம் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருஷ்ணப்பாவை மிரட்டியுள்ளாா். இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கிருஷ்ணப்பா அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் ஆறுமுகத்தை திங்கள்கிழமை காலை கைது செய்தனா்.