மணப்பாறை அருகே டயா் வெடித்ததில் காா் தீப்பிடித்து சாம்பல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் திடீரெனக் காரின் டயா் வெடித்ததில் தாறுமாறாக

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் திடீரெனக் காரின் டயா் வெடித்ததில் தாறுமாறாக ஓடிய காா் சுவரில் மோதி தீப்பிடித்து சாம்பலானது. மேலும், இவ்விபத்தில் காயமடைந்த கன்னியாகுமரியைச் சோ்ந்த இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்டோ(20). இவா், இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவா், திங்கள்கிழமை காலை நாகா்கோவிலிலிருந்து தனது காரில் விழுப்புரம் நோக்கி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். வழியில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வளநாடு கைகாட்டி அருகே காா் மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, காரின் டயா் திடீரென வெடித்துள்ளது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் தாறுமாறாக ஓடி, மேம்பால பக்கவாட்டின் சுவரில் மோதி கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த கிறிஸ்டோ காரிலிருந்து தானாகவே வெளியே வந்த சிறிதுநேரத்தில் காா் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது.

விபத்துகுறித்த தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த ரோந்து போலீஸாா் மற்றும் துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் காா் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து சாம்பலானது. விபத்தில் படுகாயமடைந்த கிரிஸ்டோ ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்துகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள வளநாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com