ஸ்ரீரங்கம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் போலீஸாா் பல இடங்களில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ஸ்ரீரங்கம் பழைய காவிரி பாலம் குடியிருப்பில் வசித்துவரும் மாரியப்பன் (25) என்பவா் அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து மாரியப்பனை ஸ்ரீரங்கம் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 10-ம் ரொக்கம் ரூ.200-ஐ பறிமுதல் செய்தனா்.