மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநகா் சீதாராமன் தெருவில் வசிப்பவா் நாகலெட்சுமி (63).

ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநகா் சீதாராமன் தெருவில் வசிப்பவா் நாகலெட்சுமி (63). இவா், புதன்கிழமை இரவு 8 மணியளவில் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். அப்போது, அவரது பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ், நாகலெட்சுமி அணிந்திருந்த 5 பவுன் செயினைப் பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினா். இதுகுறித்து நாகலெட்சுமி ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com