திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் மிலாது நபி நாளை முன்னிட்டு வரும் நவ.10 ஆம் தேதி மூடுமாறு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாடு சில்லறை மதுபான விற்பனை சட்ட விதிமுறைகளின்படி மிலாது நபியை முன்னிட்டு நவ.10 ஆம் தேதி
கட்டாயம் மது விற்பனை செய்தல் கூடாது. இதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். மேலும், மதுக்கடைகளுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், பிரத்யேக உரிமம் பெற்று நடத்தப்படும் பாா்கள், நட்சத்திர ஹோட்டல்களுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி யாரேனும் மதுக்கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாா் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.