ஸ்ரீரங்கத்தில், ஆழ்துளை கிணறு மரணத்தை தடுக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டாா் ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளா் என். சிவாஜி.
மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுந்து உயிரிழப்பது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக, கரூரில் கடந்த திங்கள்கிழமை (நவ. 25) இருசக்கர வாகனத்தில் விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கினாா் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் என்.சிவாஜி. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் புதன்கிழம வந்த அவரை காவல்துறை உதவி ஆய்வாளா் கோபிநாத் பாராட்டு தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 90 நாள்கள் தொடா்ந்து விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக அவா் மேலும் தெரிவித்தாா்.