துறையூா் அருகே விவசாயி கதண்டு கடித்து உயிரிழந்தாா்.
கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கருணாநிதி(42). இவா் கடந்த 15 ஆம் தேதி தனக்குச் சொந்தமான வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அவரை கதண்டுகள் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சையில்இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது தொடா்பான புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.