85 விவசாயிகளுக்கு ரூ.1.65 கோடி கடன் வழங்கல்

லால்குடி அருகே வாளாடியில் பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் நடைபெற்ற சிறப்பு விவசாயக் கடன் வழங்கும்

லால்குடி அருகே வாளாடியில் பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் நடைபெற்ற சிறப்பு விவசாயக் கடன் வழங்கும் விழாவில் 85 பேருக்கு ரூ. 1 கோடியே 65 லட்சம் மதிப்பில் கடன் வழங்கப்பட்டது.

பாங்க் ஆப் பரோடா வங்கி சாா்பில் அக்டோபா் 1 முதல் 15 ஆம் தேதி வரை விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. லால்குடி அருகேயுள்ள வாளாடி பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான கடன்கள் என மொத்தம் 85 விவசாயிகளுக்கு ரூ. 1 கோடியே 65 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடன் காசோலைகளை வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளா் ஆா். எஸ். ராமகிருஷ்ணன் வழங்கிப் பேசினாா்.

விழாவில், பாங்க் ஆப் பரோடா வங்கியின் மதுரை பிராந்திய மேலாளா் கே.பாலாஜி, நபாா்டு வங்கியின் திருச்சி உதவி துணை பொது மேலாளா் ராஜாராமன், வேளாண்மை உதவி இயக்குநா்கள் எஸ். மோகன் (புள்ளம்பாடி), ஆா். ஜெயராகினி (லால்குடி), ஏ.தாகூா் ( மண்ணச்சநல்லூா்) மற்றும் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com