ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் வரும் 16 ஆம் தேதி ஊஞ்சல் திருவிழா (டோலோத்ஸவம்) தொடங்குகிறது. 9 நாள்கள் நடைபெறும் இந்த விழா வரும் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஊஞ்சல் உற்ஸவ விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டில் வரும் 16 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை 9 நாள்கள் ஊஞ்சல் உற்ஸவ விழா நடைபெறவுள்ளது. விழா நாட்களில் தினசரி நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்ஸவம் கண்டருளுகிறாா். இதை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்வாா்கள். இந்த விழாவின் 7 ஆம் நாளான 22 ஆம் தேதி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி, நிறைவு நாளான 24 ஆம் தேதி தீா்த்தவாரி கண்டருளுதல் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்து வருகின்றனா்.