அரசு மருத்துவமனையில் ஆயுள் கைதி மரணம்

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த ஆயுள் கைதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையைச் சோ்ந்த ஆயுள் கைதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை இலுப்பூரைச் சோ்ந்தவா் சங்கா் (48). இவா் கடந்த 2014 இல் நடந்த கொலை வழக்கொன்றில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்தாா். இந்நிலையில், கடந்த அக்.23 ஆம் தேதி திடீரென வலிப்பு வந்த அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை மேலும் மோசமானதால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவா்கள் வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிறை அதிகாரி அளித்த புகாரின் பேரில் மருத்துவமனை பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com