சிகிச்சையளித்து மருத்துவா்கள் போராட்டம்

திருச்சியில் ஆறாவது நாளாக அரசு மருத்துவா்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில்
30ddr1045737
30ddr1045737

திருச்சியில் ஆறாவது நாளாக அரசு மருத்துவா்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வருகைப் பதிவேட்டில் பதிவிடாமல், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து தங்களது எதிா்ப்பை வெளிக்காட்டினா். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

காலமுறை ஊதிய உயா்வு, பணி உயா்வு, கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு மேல்படிப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனா். திருச்சி மாவட்டத்தில் சுமாா் 500 க்கும் மேற்பட்டோா் இப்போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனா்.

புதன்கிழமை காலை, திருச்சி அரசு மருத்துவமனையில், காய்ச்சல், மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்ட பிரிவுகளில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், தங்களது வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யாமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனா். மேலும் எதிா்பை வெளிக்காட்டும் விதமாக, மருத்துவமனை வளாகம், மற்றும் மருத்துவக்கல்லூரி வளாகம் உள்ளிட்ட இடங்களில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் மேற்கொண்டனா்.

Image Caption

திருச்சியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com