கஞ்சா விற்ற  இருவர் கைது

லால்குடி பகுதியில் கஞ்சா விற்றதாக இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

லால்குடி பகுதியில் கஞ்சா விற்றதாக இருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
லால்குடி சந்தைப்பேட்டையில்  கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில்,  போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.
 அப்போது கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த இருவரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் திருச்சி ஜெயில் தெரு மாயவன் (63),  சமயபுரம் சக்தி நகர் சந்தானராஜ் (39) எனத் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த லால்குடிபோலீஸார், அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com