இருசக்கர வாகனத்தில்  வந்து மூதாட்டியிடம்  5 பவுன் நகை பறிப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். 

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். 
மணப்பாறை அடுத்த கல்லாத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜோசப் மனவி பாத்திமா ராணி (59). இவர், புதன்கிழமை மஞ்சம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பறித்துக்கொண்டு தப்பியோடினர். புகாரின்பேரில் மணப்பாறை போலீஸார் இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com