திருச்சி காவிரிஆற்றில் குளிக்கும் போது மாயமான இளைஞரை சடலமாக போலீஸார் புதன்கிழமை மீட்டனர்.
திருச்சி கீழசிந்தாமணி பூசாரித் தெருவைச் சேர்ந்த பாலசுப்ரமணி மகன் மணிகண்டன்(22). மின்பழுது நீக்கி தொழில் செய்து வந்தார். இவர் செப்டம்பர் 8 ஆம் தேதி தனது நண்பர்களுடன் காவிரிஆற்றில் குளிக்க சென்றார். ஆற்றுபாலத்தில் இருந்து குதித்தவர் நீண்ட நேரமாகியும் கரைக்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காவிரிஆற்றில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள கீழமுல்லைக்குடி பகுதி காவிரிகரையோரத்தில் மணிகண்டனில் சடலம் மிதந்துள்ளது. இதையறிந்த திருவெறும்பூர் போலீஸார் அவரது உடலை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.