துறையூர் அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியல்

துறையூர் அருகே விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.


துறையூர்: துறையூர் அருகே விபத்துக்களை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

துறையூர் ஊராட்சி ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உள்பட்டது காளிப்பட்டி கிராமம். இந்த கிராமம் துறையூரிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது. இந்த ஊரின் இடது புறம் அம்மாப்பட்டி வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையும், வலதுபுறம் சிங்களாந்தபுரம் வழியாக பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலையும் உள்ளது. 

காளிப்பட்டியில் உள்ள துறையூர்- திருச்சி சாலை அகலப்படுத்தும் பணி அண்மையில் நடந்து முடிந்தது. பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தும் நெடுஞ்சாலைத்துறையினர் காளிப்பட்டியில் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் வாகனங்கள் அந்த ஊரை வேகமாக கடந்து செல்கின்றன. 

ஒரு சில விபத்துக்களும் நடந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை தெற்கியூரிலிந்து காளிப்பட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சேவுகன் என்பவர் மீது கார் ஒன்று மோதியது. இதில் காயமடைந்த அவர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த விபத்தால் ஆத்திரமடைந்த காளிப்பட்டி மக்கள் வேகத்தடையை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com