செப்.27- இல் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில்  செப்டம்பர் 27- ஆம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில்  செப்டம்பர் 27- ஆம் தேதி அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வட்டாட்சியர் முதலான வருவாய்த் துறை அலுவலர்கள் கிராமங்கள் தோறும் சென்று, பொதுமக்களின்  கோரிக்கைகளைக் கேட்டு தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் செப்டம்பர் 27- ஆம் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது.  வட்டத்தின் பெயர், முகாம் நடைபெறும் கிராமங்கள் என்ற அடிப்படையில் விவரம் :
திருச்சி கிழக்கு- கே. சாத்தனூர், திருச்சி மேற்கு- பிராட்டியூர் மேற்கு, திருவெறும்பூர்- எல்லக்குடி, ஸ்ரீரங்கம்- அந்தநல்லூர், மணப்பாறை- செக்கணம், மருங்காபுரி- கவிநாரிப்பட்டி, லால்குடி- ஜங்கமராஜபுரம், மண்ணச்சநல்லூர்- பூனாம்பாளையம், முசிறி- கோணப்பம்பட்டி, துறையூர்- கோம்பை, தொட்டியம்- தோளூர்பட்டி. இந்த முகாமில் சம்பந்தப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, வருவாய்த் துறை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com