நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

துறையூர் அருகே நாய்கள் கடித்த புள்ளிமான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


துறையூர் அருகே நாய்கள் கடித்த புள்ளிமான், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
துறையூர் அருகிலுள்ள சிறுநத்தம் பகுதிக்கு சனிக்கிழமை வழிதவறி வந்த 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை அந்தப் பகுதியிலிருந்த தெரு நாய்கள் விரட்டிக் கடித்தன.  இதனை கவனித்த அப்பகுதி மக்கள் தெருநாய்களை விரட்டி, மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  காயமடைந்த மானுக்கு கொப்பம்
பட்டி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.
தொடர்ந்து பச்சமலை வனப்பகுதியில் விட எடுத்துச் சென்ற போது புள்ளிமான் உயிரிழந்தது.கால்நடை மருத்துவர் தில்லையரசி, மானின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த பின்னர் அங்கு புதைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com